News
நயன்தாராவின் 81 ஆவது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு? – வித்தியாசமான கதையாம்.!
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 81 ஆவது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நயன்தாராவின் 38 ஆவது வயது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அதற்குள்ளாக நயன்தாரா 80 திரைப்படங்களில் நடித்துவிட்டார் என்பதே பலருக்கும் வியப்பானதாக உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் யானையின் முகத்தில் நயன்தாரா கை வைப்பதை போன்ற காட்சி உள்ளது. இதனால் படத்தில் நயன்தாரா யானையை வளர்க்கும் காட்டு வாசி பெண்ணாக இருப்பாளோ? என்று பேச்சுக்கள் அடிப்படுகின்றன.
இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
