Connect with us

சர்ச்சையான நயன்தாரா வாடகை தாய் பிரச்சனை –  மருத்துமனையை மூட சொன்ன அரசு

Latest News

சர்ச்சையான நயன்தாரா வாடகை தாய் பிரச்சனை –  மருத்துமனையை மூட சொன்ன அரசு

cinepettai.com cinepettai.com

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் திடீரென இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என கூறி ஷாக் கொடுத்தனர்.

என்ன விவரம் என பார்த்தபோது அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசு விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் குழந்தை பெற்றார்களா? இதற்கு யார் ஆலோசகராக இருந்தார்கள்? போன்ற விவரங்களை நயன்தாரா தரப்பிடம் பெற்றனர்.

அதன்படி நயன்தாராவின் குடும்ப மருத்துவரே இவர்களுக்கு வழிக்காட்டியது தெரிந்தது. ஆனால் அவர் தனது மருத்துவமனையை மூடிவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நயன்தாரா மருத்துவம் பெற்ற மருத்துவமனையில் விசாரனை நடத்தப்பட்டது. ஆனால் வாடகைதாய் குறித்த சரியான ஆவணங்களை அவர்கள் வைத்தில்லாமல் இருப்பது தெரியவே அந்த மருத்துவமனையை மூடும்படி எச்சரிக்கை நோட்டீஸ் அரசு தரப்பில் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா எந்த சட்ட விதிமீறல்களையும் செய்யவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

POPULAR POSTS

vijay - atlee
vadivelu police
kong vs godzilla
aadujeevitham 2
varalaxmi and sarathkumar
kamalhaasan ilayaraja
To Top