Connect with us

அந்த ஒரு பாட்டுக்காக ஒரு கதையே எழுதினார் இயக்குனர்!.. அவர் இல்லைனா இளையராஜா இல்லை..

Cinema History

அந்த ஒரு பாட்டுக்காக ஒரு கதையே எழுதினார் இயக்குனர்!.. அவர் இல்லைனா இளையராஜா இல்லை..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. சினிமாவில் இதுவரை இளையராஜா அளவிற்கு இவ்வளவு காலங்கள் ஒரு இயக்குனர் மார்க்கெட் குறையாமல் இருப்பது கடினமான விஷயமாகும்.

இதுவரை இவர் 1000க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமாவிற்கு இளையராஜா வந்த காலக்கட்டத்தில் அவரது இசைக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. இதனால் இளையராஜா தங்களது திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என இயக்குனர்களே ஆசைப்பட்டனர்.

ஆனால் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது இவ்வளவு பெரிய வரவேற்பு இவருக்கு இருக்கவில்லை. அப்போது கஷ்டத்தில் இருந்த இளையராஜா ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா? என போராடி வந்தார். இந்த நிலையில் பல இயக்குனர்களிடம் தனது பாடலின் இசையை போட்டு காண்பித்தார் இளையராஜா ஆனால் அவர்கள் அவருக்கு வாய்ப்பு தரவில்லை.

இந்த நிலையில்தான் பிரபல கதையாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்தார் இளையராஜா. பஞ்சு அருணாச்சலத்திடமும்  தனது இசையை இசையமைத்து காட்டினார். அதை கேட்ட உடனே இளையராஜாவின் திறமையை கண்டுக்கொண்டார் பஞ்சு அருணாச்சலம்.

எனவே அவர் இளையராஜாவிடம் “நான் இப்ப நகைச்சுவை படத்துக்குதான் கதை வச்சிருக்கேன். இந்த இசைக்கு ஏத்த மாதிரி ஒரு கதையை எழுதிட்டு சொல்றேன். அதுக்கு இசையமைத்து கொடு.” என கூறினார். அதே போலவே அடுத்து அன்னக்கிளி படத்தின் கதையை எழுதிவிட்டு அதில் இளையராஜாவிற்கு வாய்ப்பளித்தார் பஞ்சு அருணாச்சலம்.

இளையராஜாவிற்காக அப்போது ஒரு கதையே எழுதியுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

To Top