Friday, January 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Pattukottai kalyanasundaram

Pattukottai kalyanasundaram

பணம் கொடுப்பதில் இழுத்தடித்த தயாரிப்பாளர்!.. நாயே என திட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!.. மனுஷன் ரொம்ப கோபமான ஆளு!..

by Raj
December 4, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamil Poet Pattukottai kalyana sundaram :தமிழ் சினிமாவில் குறைவான காலங்களே இருந்தாலும் நிறைய அற்புதமான பாடல்களை இந்த சினிமாவிற்கு கொடுத்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ப்ளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் பாடல் வரிகள் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாகவே இருந்தது.

ஏனெனில் இப்போது உள்ளது போல யார் வேண்டுமானாலும் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதி விடலாம் என்கிற நிலை அப்போது இல்லை. கண்டிப்பாக பாடல் வரிகளில் ஓர் கவித்துவம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. இதனால் கவிஞர்களால் மட்டுமே பாடல் வரிகளை எழுத முடியும் என்கிற நிலை இருந்தது.

இந்த நிலையில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பை தேடி வந்தார். சிறந்த கவிநயம் கொண்ட அவர் சிறப்பான பாடல் வரிகளை கொடுத்து வந்தார். ஆனால் ஆரம்பம் முதலே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகவும் கோபமான ஒரு நபராக இருந்தார்.

ஒருமுறை ஒரு திரையரங்கம் முதலாளியை சந்திக்க சென்ற போது கூட அந்த முதலாளி இவருக்கு எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இவருக்கு அமர நாற்காலி கூட கொடுக்காமல் இருந்தார். இதனால் கடுப்பான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பேப்பரில் மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என எழுதி அவரிடம் கொடுத்தார்.

இப்படி யாராவது ஒருவர் மீது கோபப்பட்டால் அவரை முகம் கோணும் அளவில் திட்டி விடாமல் அதை காகிதத்தில் எழுதி கொடுப்பதை வழக்குமாக கொண்டிருந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் படத்தில் பாடல் வரிகள் எழுதியதற்கான பணத்தை கொடுப்பதில் மிகுந்த இழுபறி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

அவரை நேரில் சந்திக்க சென்ற பொழுது இன்று என்னால் பணம் தர முடியாது நீங்கள் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இங்கேயே நின்று கொண்டிருங்கள் என்று கூறிவிட்டார். இதனால் கடுப்பான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வழக்கம் போல ஒரு காகிதத்தை எடுத்து அதில் சில வரிகளை எழுதி தயாரிப்பாளரின் மேஜையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பிறகு அதை படித்த தயாரிப்பாளர் ஓடோடி வந்து மீதி பணத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன் நாயே உன்னை நேற்று நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில் என்று சொல்ல என்பதுதான் அந்த காகிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள்.

அந்த அளவிற்கு மிகவும் கோபமான ஒரு நபராக இருந்தாலும் அதே அளவிற்கு திறமை கொண்டானவராகவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இருந்தார்

Tags: pattukottai kalyanasundaramtamil cinemaதமிழ் சினிமாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Previous Post

உன்ன விட பெரிய இசையமைப்பாளரும் இருக்காங்க!.. இளையராஜாவிற்கு சாட்டையடி பதில் கொடுத்த வைரமுத்து!.

Next Post

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
MSV panju arunachalam

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved