News
இனிமேல் நானே ஹீரோ.. நானே டைரக்டர்! – ப்ரதீப் ரங்கநாதன் முடிவு?
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘கோமாளி’. இந்த படத்தை ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.

தற்போது ப்ரதீப் ரங்கநாதனே இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படம் பெரும் ஹிட் அடித்துள்ளது.
இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.ஆனால் முதலில் லவ் டுடே கதையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருந்தாராம் ப்ரதீப்.
ஆனால் ஸ்டுடியோ க்ரீன் கால தாமதம் செய்ததால் ஏஜிஎஸ் தயாரிப்பில் இந்த படம் வெளியாகியுள்ளது.அதனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை இயக்கி, அவரே நடிக்கவும் உள்ளாராம் ப்ரதீப் ரங்கநாதன்.
தற்போது லவ் டுடே மூலமாக அவருக்கு ஹீரோவாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ப்ரதீப் ரங்கநாதன் திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
