Latest News
”கோப்ரா”ல பண்ணுன தப்ப ”லியோ”வுல பண்ணல.. விக்ரம் குடுத்த நம்பிக்கைதான் காரணம்! – தயாரிப்பாளர் லலித் ஓபன் டாக்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள லியோ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.143.5 கோடி வசூலித்தாக கூறப்படும் நிலையில் இரண்டாம் நாள் வசூலும் 100 கோடியை தாண்டியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது,.
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளாராம் தயாரிப்பாளர் லலித். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லலித் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தயாரிப்பாளர் அறிவிப்பதுதான் சரியானது என பேசியுள்ளார். படம் பிடிக்காதவர்கள், பிடித்தவர்கள் படத்தின் வசூலை அதிகமாகவோ, குறைத்தோ சொல்லுவார்கள். அதனால் உண்மையான வசூலை தயாரிப்பாளர் வெளியிடுவதே நல்லது என கூறியுள்ளார்.
லலித் தயாரிப்பில் விக்ரம் நடித்து வெளியான கோப்ரா எதிர்பார்த்த வசூலை தரவில்லை. ஆனால் லியோ எதிர்பார்த்த வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர் “கோப்ரா படத்தில் செய்த தவறை நான் லியோவில் செய்யவில்லை. நான் லோகேஷை ஒப்பந்தம் செய்தபோது விக்ரம் வெளியாகி இருக்கவில்லை. விக்ரம் வெளியானபோது அதன் வெற்றி பெரிதாக இருந்தது. அதன் பிறகுதான் இந்த படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கலாம் என திட்டமிட்டேன். செலவுகளை கட்டுப்படுத்தவே முயன்றேன். கோப்ராவில் அதை செய்யாததுதான் சிக்கல்.
முதலில் லியோ படத்தை இங்கேயே எடுக்கலாம் என நினைத்தோம். லோகேஷ் கேட்டதால் காஷ்மீர் சென்றோம். அப்போதும் பட்ஜெட் அதிகமாக தெரிந்தால் காஷ்மீர் இல்லாமல் வேறு எங்காவது பார்க்கலாம் என லோகேஷ் சொன்னார். ஆனால் நான் காஷ்மீரே இருக்கட்டும் என அவரது வழியில் வேலை பார்க்க அவரை அனுமதித்தேன்” என கூறியுள்ளார்.