News
தமிழனை விட அறிவாளி ஒருத்தன் இருக்கானா அது அவந்தான்.. ராதா ரவி புகழ்ந்து பேசிய நபர்.. யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா அவரின் மகனான ராதா ரவிக்கும் அவருக்கு கிடைத்த அந்தஸ்து சினிமாவில் கிடைத்தது.
ராதாரவியும் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் பெரிய பிரபலங்களாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ராதாரவி.
அதே போல அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக ராதாரவி இருந்தார். தொடர்ந்து நிறைய அரசியல் சார்ந்த விஷயங்களை அவர் பேட்டிகளில் பேசுவதை பார்க்க முடியும்.
ராதா ரவி கொடுத்த பதில்:
இப்படியாக சமீபத்தில் அவர் பேசிய விஷயம் ஒன்று அதிக வைரலாகி வருகிறது. ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது உலகிலேயே அதிக அறிவுள்ள ஒரு மக்கள் என்றால் அது இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தான்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எந்த ஒரு தேசத்துக்கு போனாலும் அதை தங்கள் சொந்த தேசம் போல் பார்ப்பவர்கள். பல நாடுகளுக்கு அவர்கள் சென்று இருக்கின்றனர். இலங்கை தமிழர்கள் இல்லாத நாடுகளே உலகத்தில் கிடையாது.
ஆனால் எங்கு சென்றாலும் அங்கு அந்த நாட்டையே மாற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் 10 விரல்கள் தான் அவர்களுக்கு ஆயுதம் என்று கூறியிருந்தால் ராதாரவி.
