ரஜினி நடித்து தற்சமயம் வெளியாக இருக்கும் திரைப்படமான கூலி திரைப்படம் தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது பொதுவாக ஏ சான்றிதழ் பெரும் திரைப்படங்களை 18 வயதிற்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற தகுதி பெற்ற படமாக பார்க்கப்படும்.
அதற்கு கீழே வயது உள்ளவர்கள் அந்த படத்திற்கு போக முடியாது இந்தியாவில் கூட இந்த விதிமுறை பெரிதாக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட அமெரிக்கா மாதிரியான நாடுகளில் இந்த விதிமுறைகள் பரவலாக பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த நிலையில் எதற்காக கூலி திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து பிஸ்மி பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது ஒன்றிய அரசுதான் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக இருக்கிறது.
இந்த நிலையில் கூலி திரைப்படத்தை தயாரித்தது திமுக குழுமம் தான் என்பதுஅவர்களுக்கு தெரியும். எனவே தான் அவர்களை பழி வாங்குவதற்காகவே ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.
ஆனால் இந்த விஷயத்திற்காக எல்லாம் ரஜினிகாந்த் வந்து பேச மாட்டார் அவருக்கு இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு வேலை இந்த படத்தையே தணிக்கை குழு தடை செய்து வைத்திருந்தால் அப்பொழுது ரஜினிகாந்த் கண்டிப்பாக களத்தில் இறங்கி இருப்பார் என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.