News
பிரச்சனையே வேணாம்னு தளபதி போனாலும் இவர் விடமாட்டார் போல!.. வேட்டையின் டீசரில் அடுத்த பஞ்சாயத்து!..
தமிழ் சினிமாவில் விஜய் ரஜினி இருவருக்கும் இடையேயான சண்டை கடந்த சில காலங்களாக சூடு பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யும் சிவகார்த்திகேயனும் தான் என்று கூறவேண்டும். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒருவர் ஒரு பட்டத்தை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார்கள்.
கமல்ஹாசனின் உலகநாயகன் என்கிற பட்டமாக இருக்கட்டும் எம்ஜிஆரின் புரட்சித்தலைவர் என்கிற பட்டமாக இருக்கட்டும் இந்த பட்டங்களை வேறு ஒரு நடிகரும் எடுத்துக் கொள்வதை அந்த நடிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையில் டான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் பொழுது அவரை நடிகை சரிதா குட்டி ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார்.

அதேபோல வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசும்பொழுது அடுத்த ரஜினிகாந்த் விஜய்தான் என்று பேசியிருந்தார் இந்த விஷயங்கள் ரஜினிகாந்துக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து அவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை தூக்க 100 பேரு என்று பாடல் வரிகளை வைத்தார்.
அது மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பேசும்பொழுது என்னதான் காக்கா உயரமாக பறந்தாலும் அதனால் கழுகின் உயரத்தை தொட முடியாது என்று விஜய்யை குறிப்பிட்டு கூறியிருந்தார் ரஜினிகாந்த். இதனை அடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசும் பொழுது ஒருவரின் பட்டத்தை இன்னொருவர் எடுத்துக் கொள்ள முடியாது.
சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்று விஜய் கூறியிருந்தார் ஆனால் ரஜினி இப்பொழுதும் அதோடு நிறுத்தாமல் தற்சமயம் அந்த வேட்டையன் திரைப்படத்தின் டீசரிலும் விஜய் குத்தி காட்டி பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
அதற்கு தகுந்தார் போல ஒரு வரியும் இந்த டீசரில் இடம் பெற்று இருக்கிறது குறி வச்சா இரை விழனும் என்று ரஜினி கூற பின்னாடி கழுகு சத்தம் கேட்பதாக அந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது. இது விஜய்யை குறிக்கும் விதமாக ரஜினி பேசிய வரிகள் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தனது தோல்வியை தானே விஜய் ஒப்புக்கொண்டார் அதை தான் குறி வைத்தால் இரை விழனும் என்று கூறுகிறார் ரஜினிகாந்த் என்று பேசிய வருகின்றனர்.
