சிவகார்த்திகேயன் இப்படி பண்ணிட்டிங்களே – கண்ணீர் விட்ட ரஜினி


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Social Media Bar


இந்த படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆவார். அவருடைய கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.


கல்லூரி பிரின்ஸ்பலாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். பலரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது ”இந்த படம் உங்களுக்கு பழைய கல்லூரி நியாபகங்களை நினைவுப்படுத்தும் திரைப்படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.


அதே போலவே இந்த படத்தில் எமோசனலான இடங்கள் பலவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் டான் படத்தை திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினி அதன் கடைசி காட்சிகளை பார்க்கும்போது கண்ணீர் விட்டு அழுததாகவும், இறுதி 30 நிமிடங்கள் உணர்வு பூர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.