Tamil Cinema News
கமல் என்னை சுவற்றில் இழுத்து பிடிச்சி அதை பண்ணுனார். ஓப்பனாக கூறிய ரம்யாகிருஷ்ணன்.
ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாநாயகியாக இருந்தார். வெகு வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அதாவது ரம்யா கிருஷ்ணனுக்கு நிஜமாகவே வயது ஆகிறதா? இல்லையா? என்பதுதான் அந்த சந்தேகம்.
இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் திடீரென படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் எண்ட்ரி ஆனார். அதுவும் சாதாரண வில்லி கதாபாத்திரம் கிடையாது. இப்போது வரை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இணையான இன்னொரு வில்லி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறலாம்.
இந்த நிலையில் மீண்டும் கவர்ச்சியாக பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இவர் நடித்தார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் கூறும்போது நல்ல நடிகர்களுக்கே கமலுடன் நடிப்பது கஷ்டம் அப்படி என்றால் என் நிலையை யோசிச்சு பாருங்க
மேகி காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என என்னிடம் செய்து காட்டினார். நான் அவரை இழுத்து சென்று சுவற்றில் வைத்து கழுத்தை பிடித்து டயலாக் பேச வேண்டும். அதை என்னிடம் டெமோவுக்கு கமல் செய்து காட்டினார்.
நான் எடை கம்மி என்னை ஈஸியாக அவர் இழுத்து சென்றுவிட்டார். படப்பிடிப்பில் அவரை இழுத்து சென்று அந்த டயலாக்கை பேசுவதற்குள் எனக்கு போதும் போதும் என ஆகிவிட்டது என கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.