ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.
அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படையப்பா திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்பொழுது படையப்பா திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய பிறகு நான் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திய பிறகு விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.
ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அதேபோல நான் எதிர்பாராமல் நடித்த இன்னொரு திரைப்படம் பாகுபலி பாகுபலி எனக்கு இந்திய அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் எனக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.