படப்பிடிப்பில் என்னை அடிச்சுட்டு 50 தடவை சாரி கேட்டார் சஞ்சய் தத்!.. வையாபுரிக்கு நடந்த சம்பவம்!..

Leo movie vaiyapuri: தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை ஓடிய விஜய் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக லியோ இருக்கிறது.

இதனால் லியோ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு இது ஓடாது என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வையாபுரி நடித்திருந்தார். துள்ளாத மனமும் துள்ளும் காலம் முதலே விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் நடிகர் வையாபுரி. ஆனால் விஜய் பெரிய உயரத்தை தொட்ட பிறகு அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் கூட்டத்தை தவிர்த்து விட்டார்.

இதனால் அவர்களெல்லாம் பெரிதாக வளராமல் இருந்தனர். இந்த நிலையில் வையாபுரி லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். அவருக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார்.

leo
leo
Social Media Bar

அதில் ஒரு காட்சியில் சஞ்சய் தத் வையாபுரியிடம் கேள்வி கேட்பது போன்ற காட்சி வரும் அதில் அவரது கழுத்தை பிடித்து கேள்வி கேட்க வா என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் சஞ்சய் தத்.. பண்ணுங்க சார் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர்.

அதன்படி வையாபுரி கழுத்தை பிடித்துள்ளார் சஞ்சய் தத். படப்பிடிப்பு முடித்த பிறகு கிட்டத்தட்ட ஒரு 50 தடவையாவது வையாபுரி கழுத்தை தழுவி கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார் சஞ்சய் தத். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் அவ்வளவு நல்ல மனிதராக இருந்தார் என்று சஞ்சய் தத் குறித்து பேட்டியில் கூறியிருந்தார் வையாபுரி.