Connect with us

இந்திய திரைப்படங்களிலேயே முதல் முறையாக பாராளுமன்றத்தில் ஷூட்டிங் – கெத்து காட்டும் தமிழ் சினிமா..!

Latest News

இந்திய திரைப்படங்களிலேயே முதல் முறையாக பாராளுமன்றத்தில் ஷூட்டிங் – கெத்து காட்டும் தமிழ் சினிமா..!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தனித்துவமான இடத்தில் இருப்பார்கள். திரை துறைக்கு வந்தது முதலே வித்தியாசமான கதை களத்தில் சிறப்பான படங்களை கொடுத்து கொண்டிருப்பார்கள். 2 அல்லது 3 படங்களே எடுத்திருந்தாலும் அதிகமாக பிரபலமாகி இருப்பார்கள். இயக்குனர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோரை இந்த வரிசையில் கூறலாம். அப்படி ஒரு இயக்குனர்தான் பி.எஸ் மித்ரன்.

இவர் இயக்கிய முதல் திரைப்படமான இரும்பு திரை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ திரைப்படத்தை எடுத்தார்.

அதுவும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்சமயம் நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே அவர் இயக்கிய இரண்டு படங்களுமே வித்தியாசமான கதை களத்தை கொண்டு சிறப்பான படமாக அமைந்ததால் இந்த படத்திற்கும் கூட மக்களிடையே அதிக வரவேற்பு நிலவி வருகிறது. 

இந்த நிலையில் அஜர்பைன் நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் தற்சமயம் இந்த படத்தின் ஷூட்டிங் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய சினிமாவில், வேறொரு நாட்டு பாராளுமன்றத்திற்கு சென்று ஷூட்டிங் எடுத்ததாக வரலாறே கிடையாது என கூறப்படுகிறது. இந்நிலையில் முதன் முதலாக வெறொரு நாட்டு பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் திரைப்படமாக அஜர்பைன் உள்ளது.

அஜர்பைன், ஜார்ஜியா ஆகிய நாடுகளில் எடுத்த படப்பிடிப்புக்கு மட்டும் ரூபாய் 4 கோடி செலவானதாக படக்குழு கூறியுள்ளது.

POPULAR POSTS

dhanush ilayaraja
raghava lawarance lokesh kanagaraj
vijayakanth
vijay - atlee
vadivelu police
kong vs godzilla
To Top