Cinema History
அன்னிக்கி சாவித்திரியால் இரவெல்லாம் நான் தூங்கலை.. கண்ணீர் வடித்த ரசிகை!.. எந்த நடிகரும் ரசிகருக்கு இப்படி செஞ்சதில்ல!.
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் சிவாஜி கணேசனுக்கு எப்படி ஒரு பெரிய ரசிக்கப்பட்டாலும் இருந்ததோ அதேபோல நடிகை சாவித்திரிக்கும் இருந்தது. பள்ளி பெண்களில் துவங்கி பலருக்கும் பிடித்த ஒரு நடிகையாக சாவித்திரி இருந்து வந்தார்.
அவர் மற்ற மொழிகளிலும் கூட கொஞ்சம் பிரபலமாகவே இருந்தார் இந்த நிலையில் பள்ளி காலங்களில் இருந்து பத்திரிக்கையாளர் சிவசங்கரிக்கு சாவித்திரி மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. வளர்ந்த பிறகு ஒரு முறையாவது சாவித்திரியை நேரில் சந்தித்து அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது.
இதற்காக ஒருமுறை சாவித்ரி காரில் போகும் பொழுது அவரை பின்பற்றி சென்ற சிவசங்கரி அவரது வீட்டை அடைந்து விட்டார். ஆனால் அங்கு நின்ற காவலாளி சிவசங்கரியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் அப்போதுதான் வெளியில் வந்த சாவித்திரி விஷயத்தை அறிந்து சிவசங்கரியை அழைத்தார்.
சிவசங்கரி அவரிடம் வந்து ஒரு ஆட்டோகிராப் மட்டும் போட்டு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவரிடம் கையெழுத்து போட்டு கொடுத்த சாவித்திரி சிறிது நேரம் நின்று பேசிவிட்டு பிறகு படப்பிடிப்பிற்கு தாமதமாகிறது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் நிறைய தடவை சந்தித்து இருக்கின்றனர் முக்கியமாக சாவித்திரி உடல்நிலை மோசமான நிலையில் இருந்த போது கூட சிவசங்கரியை அவர் ஒரு முறை சந்தித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இவ்வளவு காலங்கள் ஒரு ரசிகரோடு நட்பாக இருந்திருக்க மாட்டார்.
அந்த நிலையில் சிவசங்கரி அவரிடம் பேசி விட்டு வந்த பிறகு அந்த இரவெல்லாம் தூங்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அப்பொழுது சாவித்திரி மோசமான நிலையில் இருந்தார் ஒருவேளை இந்த சிவசங்கரி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடிகையர் திலகம் திரைப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் அமைந்திருக்குமோ என்றும் சிலர் கூறுவது உண்டு.