Connect with us

சொந்த மகனையே நாட்டை விட்டு விரட்ட போட்ட ஸ்கெட்ச்.. கண்டுப்பிடித்த செல்வா சார்!..

selvaraghavan

Cinema History

சொந்த மகனையே நாட்டை விட்டு விரட்ட போட்ட ஸ்கெட்ச்.. கண்டுப்பிடித்த செல்வா சார்!..

Social Media Bar

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். அவர் சினிமாவில் படம் இயக்க துவங்கியது முதலே அவரது திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக தெரியும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்த பிறகு செல்வராகவனுக்கான ரசிகர் பட்டாளம் பெரிதானது. முக்கியமாக நடிகர் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன்தான். செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களே தனுஷிற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தன.

ஆரம்பத்தில் செல்வராகவனை இயக்குனர் ஆக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் அவரது தந்தை கஸ்தூரிராஜா. கல்லூரி காலங்களிலேயே இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை செல்வராகவனுக்கு இருந்துள்ளது.

அதை அறிந்து கொண்ட அவரது தந்தை ஒழுங்காக படித்து முடி, பிறகு இயக்குனராகிக் கொள்ளலாம். சினிமா எங்கேயும் போய் விடாது எனக் கூறி அவரை கல்லூரியில் சேர்த்துள்ளார். கல்லூரி முடித்து வந்த செல்வராகவனை அமெரிக்காவிற்கு எப்படியாவது அனுப்பி விடலாம் என்று நினைத்துள்ளார் கஸ்தூரி ராஜா.

எனவே அமெரிக்காவில் ஒரு பிலிம் இன்ஸ்டிடியூட் இருப்பதாகவும் அங்கு சென்று படிக்க சொல்லி அமெரிக்காவுக்கு கிளப்பியுள்ளார் கஸ்தூரிராஜா ஆனால் இந்த விஷயத்தை அறிந்த செல்வராகவன் என்னை நாடு கடத்த பார்க்கிறீர்களா என உஷாராக கண்டுபிடித்து அதை தவிர்த்து விட்டு சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து விட்டார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top