Connect with us

சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்த 3 கதாநாயகிகள்!.. யார் யார் தெரியுமா?

Cinema History

சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்த 3 கதாநாயகிகள்!.. யார் யார் தெரியுமா?

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. நடிகர்களின் மகன்கள் சினிமாவில் தொடர்பு உள்ளவர்கள் போன்றவர்கள் வேண்டுமானால் எளிதாக வாய்ப்பை வாங்கிவிடலாம். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அது கடினமான காரியமாகும்.

ஆனாலும் சாதாரண ஆட்களாக இருந்து தற்சமயம் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களான நடிகர்கள் பலரும் உள்ளனர். நடிகைகளை பொறுத்தவரை அதிகப்பட்சம் மாடலிங் துறையில் இருப்பவர்களே நடிகையாக ஆகிறார்கள்.

அதை தாண்டி ரொம்ப குறைவான அளவில் நாடக நடிகைகள் சிலர் சினிமாவில் நடிகைகள் ஆகியுள்ளார். அதில் முதலானவர் நடிகை வாணி போஜன்.

வாணி போஜன்:

வாணி போஜன் 2013 இல் ஒளிப்பரப்பாகிய தெய்மகள் என்கிற நாடகத்தில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த நாடகம் சென்றது. அதன் பிறகு லெட்சுமி வந்தாச்சு என்கிற நாடகத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

அதன் பிறகு லாக்கப், மஹான் என பல படங்களில் இவர் நடித்துவிட்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி சங்கர்:

2014 இல் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற நாடகம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். அவரது முதல் திரைப்படமான மேயாத மான் திரைப்படமே அவருக்கு சிறப்பான திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பை பெற்றார் ப்ரியா பவானி சங்கர்.

மிர்னல் தாக்கூர்:

2012 முதலே ஹிந்தியில் சீரியலில் நடித்து வருபவர் நடிகர் மிர்னல் தாக்கூர். 2014ல் துவங்கி 2022 வரை தொடர்ந்து பல மொழிகளில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார். 2022 இல் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிர்னல் தாக்கூர்.

POPULAR POSTS

samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
thammana karthi
To Top