Latest News
உங்க காலில் வேணும்னாலும் விழுறேன். அதை செய்யாதீங்க!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!.. பத்திரிக்கையாளரின் பகீர் பேட்டி..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரும் இடத்தை பெற்றுள்ளார்.
தொடர் தோல்விகள்
ஆனால் பெரும் இடத்தில் வந்த பிறகு பலரிடம் அவர் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. சில காலங்கள் மக்கள் மத்தியிலும் கூட சிவகார்த்திகேயன் அதிகமாக தெரியாமல் இருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை கண்டன.
எனவே மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து மீண்டும் விஜய் டிவி மாதிரியான சின்னத்திரைகளிலும், சன் டிவிகளில் பேட்டிகளிலும் வருவதன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.
சிவகார்த்திகேயன் செய்த துரோகம்
இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சிவகார்த்திகேயன். ஏனெனில் இதற்கு தயாரிப்பு செலவு எக்கச்சக்கமாக செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இமான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதை வெளியில் செல்ல முடியாது. எனது குழந்தைகள் அதனால் பாதிக்கப்படுவர் என்றும் நேரடியாக கூறிவிட்டார்.
எனவே சிவகார்த்திகேயனுக்கும் இமான் முதல் மனைவிக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்திருக்குமா? என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வர ஆரம்பித்தன. ஏனெனில் இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தற்சமயம் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் அந்தனன் கூறும் பொழுது மக்களே என்ன பிரச்சனை என்று குழப்பத்தில்தான் இருந்தார்கள் ஆனால் எப்பொழுது இமானின் முதல் மனைவி சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர் என்று பதிவிட்டரோ, அப்போதே மக்களுக்கும் சந்தேகம் வந்துவிட்டது.
மேலும் சிவகார்த்திகேயன் இந்த வீடியோவை பார்த்தவுடனே இமானுக்கு போன் செய்து அண்ணா உங்கள் காலில் வேணும்னாலும் விழுகிறேன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லுங்க என்று கூறியுள்ளார். ஆனால் கோபமடைந்த இமான் அவரிடம் சத்தம் போட்டுவிட்டு ஃபோனை வைத்து விட்டாராம். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவரது ஐடி குழுவை அழைத்து இமானின் வீடியோ அதிகம் பரவாத வகையில் செய்யுமாறு கூறியுள்ளார். என பத்திரிகையாளர் அந்தனன் அந்த பேட்டியில் தகவல் அளித்துள்ளார்.