News
அந்த ரஜினி இயக்குனர் இல்லைனா இப்ப இந்த வாழ்க்கை இல்லை!.. மனம் உருகிய எஸ்.ஜே சூர்யா!
தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக ட்ரெண்ட் ஆகி வரும் நடிகராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். தமிழில் முதன் முதலாக ஆசை படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார் எஸ்.ஜே சூர்யா. அதன் பிறகு வாலி, குஷி என இரு ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கினார்.
தற்சமயம் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது நியு, அன்பே ஆருயிரே இரண்டு திரைப்படங்களும் எனக்கு மெஹா ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த இரு திரைப்படங்களுமே கோடிகளில் வருவாய் அளித்தது.
அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த நான் எப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அதற்கு பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்தேன். பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் என்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்தார்.
அவர் இயக்கிய இறைவி திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்கு பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. எனவே இதற்காக அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்.
