Connect with us

உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கேன்.. ஆனால் காட்டிக்க முடியலை.. விஜய் படம் குறித்து பேசிய ஸ்ரீ காந்த்..

vijay srikanth

News

உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கேன்.. ஆனால் காட்டிக்க முடியலை.. விஜய் படம் குறித்து பேசிய ஸ்ரீ காந்த்..

Social Media Bar

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு கல்லூரி பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது.

கிட்டத்தட்ட கமல்ஹாசனை போல இவரும் ஒரு காதல் மன்னனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே ஸ்ரீகாந்த் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

தமிழில் வரவேற்பு:

அவர் நடித்த ரோஜா கூட்டம் மாதிரியான திரைப்படங்கள் அப்போது வெகுவான வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக பம்பர கண்ணாலே மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் பொழுது கதைகளை தேர்ந்தெடுப்பதில் நிறைய தவறவிட்டார் ஸ்ரீகாந்த்.

மேலும் அவரது உடல் எடை அதிகரித்ததும் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் தோன்ற துவங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருந்தாலும் அவருக்கு ஒரு கம்பேக்காக வந்த திரைப்படம் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன்.

ரீ எண்ட்ரிக்கு பிறகும் வாய்ப்பில்லை:

நண்பன் திரைப்படம் வந்த பொழுது மீண்டும் உடல் எடையை குறைத்து அழகான சின்ன பையன் போலவே அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகளோ அல்லது வரவேற்புகளோ கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இது குறித்த அவரிடம் கேட்ட பொழுது எனக்கும் அதுதான் தெரியவில்லை நண்பன் திரைப்படத்திற்கு பிறகும் கூட ஏன் என்னை யாருமே அழைக்கவில்லை. நான் நன்றாக தானே நடித்து இருந்தேன் வெளியில் நாங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் அழுது கொண்டுதான் இருக்கிறோம்.

எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் ஏன் எங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று எங்களுக்கே தெரியவில்லை என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

To Top