போலீசாரால் தனக்கு நடந்த அனுபவத்தை பாடலில் வைத்த கண்ணதாசன்!.. எந்த பாட்டு தெரியுமா?..

Poet Kannadasan : தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் பாடல்களுக்கு அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் கண்ணதாசன்.

ஏழ்மையான நிலையில் இருந்தே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார் கண்ணதாசன். தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் கையில் காசும் இல்லாமல் சென்னைக்கு வந்தார். இப்போது வரை இப்படி கண்ணை மூடிக்கொண்டு சென்னைக்கு வருபவர்கள் அதிகம்.

Social Media Bar

அப்படி வந்த கண்ணதாசனுக்கு தங்குவதற்கு இடமிருக்கவில்லை. அப்போதெல்லாம் சென்னையில் தங்குவதற்கு இடமில்லாதவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரைதான் அடைக்கலம். எனவே கண்ணதாசன் நேராக மெரினா கடற்கரை சென்று அங்கு உறங்கி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர்கள் அவரிடம் 25 பைசா கொடுத்தால்தான் இங்கு தூங்க விடுவோம் என கூறியிருக்கின்றனர். ஆனால் கண்ணதாசனுக்கு அவர்களிடம் காசு கொடுக்க விருப்பமில்லை. எனவே அவர் நடந்து சென்றபோது அவருக்கு காந்தி சிலை அடைக்கலம் கொடுத்தது. அங்கு உறங்கினார்.

அதன் பிறகு அவர் பாடலாசிரியர் ஆன பிறகு அவர் தயாரித்த சுமைதாங்கி திரைப்படத்தில் அதை பேசும் விதமாக பாடல் வரிகளை அமைத்தார். மனிதர்கள் கை விட்டால் கூட காந்தியின் சிலை கூட தனக்கு உதவியது. அந்த விதத்தில் பார்க்கும்போது நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிற பாடலை எழுதினார்.

அதில் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்.