Tamil Cinema News
சூர்யாவின் ஆசையில் மண்ணை போட்ட ரஜினிகாந்த்.. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா..!
நடிகர் விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலகட்டங்களில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.
ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த சமயத்தில் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரும் நடிகர் விஜயகாந்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் படத்தில் நடித்ததால் அது விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.
அந்த படமும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அதே முறையை பின்பற்றினார். நடிகர் சூர்யாவிற்கு அப்பொழுது குறைந்த அளவிலான வரவேற்புகள் தான் இருந்தது.
எனவே அவர் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படம் தான் என்றாலும் கூட அந்த படம் வெளியாவதற்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் வெளியானது.
இதனால் பெரியண்ணா திரைப்படத்திற்கு அப்பொழுது திரையரங்குகள் அதிகமாக கிடைக்காமல் போனது. இதனால் வசூலிலும் பெரியண்ணா படம் வசூல் செய்யவில்லை ஒருவேளை தனித்து வெளியாகி இருந்தால் பெரிய வரவேற்பு பெற்றிருக்கும்.
ஆனால் ரஜினி படத்துடன் போட்டி போட்டதால் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் போனது அதனால் சூர்யாவிற்கும் அந்த படத்தால் வரவேற்பு கிடைக்காமல் போனது.
