எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன்.
டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஏதாவது ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தால் கூட அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் அளவிற்கு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் டி ஆர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் ஒரு பாடலை டி.ஆர் பாடி இருக்கிறார். சிக்கிட்டு என்கிற அந்த பாடல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அந்த பாடலின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் வந்து பாடினால் அது படத்திற்கு நல்ல பிரமோஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனவே இது குறித்து டி.ஆரிடம் பேசி இருக்கின்றனர். ஆனால் டி.ஆர் அதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை அடுத்து தயாரிப்பு நிறுவனம் டி.ஆரை அழைப்பது குறித்து இப்பொழுது சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.