செம்பிக்கு பிறகு வாய்ப்புகளை பெற்ற அஸ்வின்!  –  அடுத்த படத்தின் அப்டேட்!

விஜய் டிவியில் டிவி சீரியல்களில் நடித்து, பிறகு குக் வித் கோமாளி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அஸ்வின்குமார். இவருக்கு திரை துறையில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்ததால் தொடர்ந்து அதற்காக முயற்சித்து வந்தார்.

Social Media Bar

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு என்ன சொல்ல போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அந்த படத்தின் விழாவில் அஸ்வின் பேசிய சில விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக அமையவே அவரின் மீது அதிகமாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் கொஞ்ச நாட்கள் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். இதற்கு பிறகு தற்சமயம் பிரபு சாலமன் இயக்கிய செம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மீண்டும் திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் அஸ்வின்.

அருள்நிதியை வைத்து தேஜாவு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வினுக்கு இந்த படம் வெற்றி படமாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.