சினிமா இண்டஸ்ட்ரிய நாறி போய் கிடக்கு.. படுக்க கூப்பிடுறாங்க.. பிரபலங்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த சனம் ஷெட்டி..!
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது தொடர்ந்து சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவில் நடிகைகள் வாய்ப்பை பெறுவதற்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் வரும் நடிகர்கள் போன்றவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ள வேண்டும் என்பது வெளிப்படையாகவே சினிமாவில் இருந்து வருகிறது.
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சினிமாவில் இது ஒரு மாறாத விஷயமாக இருக்கிறது. அதனால்தான் சினிமா துறை மட்டும் இப்பொழுதும் மக்களால் பெரிதாக மதிக்கப்படாத ஒரு துறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி குறித்து வெளியான ஒரு எக்ஸ் தல பதிவின் காரணமாக அதிக சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி பதில் அளித்தும் இருந்தார்.
இந்த நிலையில் சனம் ஷெட்டி இது குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது எனக்கும் இந்த மாதிரியான டார்ச்சர்கள் இருந்தன. முதலில் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு மோசமாக எல்லாம் சினிமாவில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று தான் நினைப்போம்.
ஆனால் உண்மை அது கிடையாது அவர்கள் நேரடியாகவே கேட்பார்கள் எனக்கு அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களின் திட்டம் என்னவென்று புரிந்துவிடும்.
எனவே நானே விலகி விடுவேன். அது அப்படியே போய் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பெரிய படத்தில் வாய்ப்புகள் கிடைப்பதாக இருந்தால் கூட நான் வருகிறேன் என்றால் கதவை சாத்தி விடுவார்கள். ஏனெனில் நான் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துவர மாடேன் என்று அவர்களுக்கு தெரியும்.
திறமைக்கு எல்லாம் சினிமாவில் இப்பொழுது வேலையே இல்லை சினிமா முழுக்க முழுக்க நாறிப் போய்தான் கிடக்கிறது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி.