தோழியின் கணவருக்கே ரூட் விட்ட நடிகை.. இப்ப ரோட்டில் நிற்கும் தோழி.. என்ன கொடுமை சார் இது!.

சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் மீது ஆசைப்படுவதும், அதே போல நடிகைகள் நடிகர்கள் மீது ஆசைப்படுவதும் சகஜமான விஷயமாகும். பொதுவாகவே சினிமாவில் ஒருவர் மீது ஆசை வைத்துவிட்டால் அவரை அடைந்தே ஆக வேண்டும் என்கிற நிலையில்தான் பிரபலங்கள் இருப்பார்கள்.

ஆனால் ஒரு நடிகை தனது தோழியின் கணவரின்  மீது ஆசை வைத்து பல வேலைகளை பார்த்துள்ளார். இதுதான் இப்போது வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

தோழியுடன் பழக்கம்:

இந்த நடிகையும் அவரது தோழியும் வெகு காலங்களாகவே பழக்கத்தில் இருந்து வருகின்றனர். தோழியின் கணவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஆனால் அவர் நடிகரெல்லாம் கிடையாது. இருந்தாலும் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம்தான்.

Social Media Bar

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பார்த்தது முதலே அவர் மீது ஆசை கொண்டு இருந்திருக்கிறார் இந்த நடிகை. நடிகைக்கு 35 வயதாகி இருந்தாலும் இன்னமும் தனது அழகை சிறப்பாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இவருக்கு சினிமாவிலேயே ஏகப்பட்ட நடிகர்களிடம் வரவேற்பு உண்டு என்றாலும் அவருக்கு அவரக்ள் மீது விருப்பமில்லை.

தோழி கணவர் மீது ஆசை:

இந்த நிலையில் ஒரு வழியாக தோழி மூலமாக அவரது கணவருடன் நடிகைக்கு இண்ட்ரோ கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி கொண்டு அவரது கணவரை வளைத்து போட்டுள்ளார் அம்மணி.

ஏற்கனவே அந்த நபருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இல்லற வாழ்க்கை நல்லப்படியாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்த நடிகை குட்டையை குழப்பியதால் தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு நடிகை பின்னால் சென்றுவிட்டாராம் தோழியின் கணவர்.

இந்த நிலையில் குழந்தைகளுடன் வீதிக்கு வந்துவிட்டாராம் அந்த தோழி தற்சமயம் இவர் தன்னுடைய கணவரை சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிட்டு வருகிறாராம். இத்தனை வருடம் கூட வாழ்ந்த என்னையவே விட்டுவிட்டு வந்த அந்த நபரை நடிகை எப்படி நம்புகிறார் என கேட்கிறாராம் அந்த தோழி.