Connect with us

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

kamalhaasan new

Cinema History

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Social Media Bar

Actor kamalhaasan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரைத்துறையில் ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். பொதுவாக வரும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அதிலேயே இருந்து கொள்வார்கள் அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான விஷயம் என்று கூறலாம்.

அப்படி நடிக்கும் போது மக்கள் பெரிதாக அந்த நடிகர்களிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுக்காமல் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதை பார்க்க முடியும்.

ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஒரு கமர்சியல் கதாநாயகனாக நடித்திருந்தாலும் போகப் போக பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ரிஸ்க் எடுத்து நடித்து காட்டினார் ஹே ராம், குணா, ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் இதில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

இதனால் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பிற்கு பெரும் அங்கீகாரம் பெற்ற நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசனை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். ஆனால் பாலச்சந்திரிடம் அவ்வளவு எளிதாக வாய்ப்பை பெற்று விடவில்லை கமல்ஹாசன்.

அரங்கேற்றம் என்கிற ஒரு திரைப்படத்திற்கு பாலச்சந்தர் இயக்கும்போது அதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முதன்முதலாக கமல்ஹாசன் அவரிடம் போய் சேர்ந்தார். அப்பொழுது உதவி இயக்குனராக வேண்டும் என்பதுதான் கமலஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது.

ஆனால் அங்கு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் பாலச்சந்தர் ஆள் தேடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கமல்ஹாசன் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்ட பொழுது நடிப்பதற்குதான் நான் ஆள் எடுக்கிறேன். உதவி இயக்குனர் தேவையில்லை என்று கூறிவிட்டார் பாலச்சந்தர்.

எனவே அவர் கமல்ஹாசனை உதவி இயக்குனராக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை கமல்ஹாசன் புரிந்து கொண்டார். இருந்தாலும் அதில் நடித்தார் கமல். அந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பை பார்த்த பாலச்சந்தருக்கு இயக்குனர் ஆவதை விட கமல்ஹாசன் நடிகராவது தான் அவரது எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தார் அதன் பிறகுதான் பாலச்சந்தர் கமல்ஹாசனை தொடர்ந்து வளர்த்து விட துவங்கினார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top