Tamil Cinema News
வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.!
யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென நடிகர் சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க துவங்கியிருக்கின்றனர். சிம்பு வரிசையாக நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
ஏற்கனவே இவர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் படத்தில் நடிக்க துவங்கி இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஒருவேளை வடசென்னை 2 திரைப்படத்திற்கான பட பிடிப்பாக இது இருக்குமா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன.
ஏனெனில் வடசென்னை திரைப்படத்திலேயே அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இருந்த போட்டியால் சிம்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை எனவே அதைப் பின்கதையாக கொண்டு இந்த படம் அமைந்திருக்குமோ என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
