Vijay Assistant: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்சமயம் அரசியலுக்கு சென்றிருக்கும் நடிகராவார். இவரிடம் உதவியாளராக பணிப்புரிந்த செல்வம் என்கிற நபர் கொடுத்த சில தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருக்கின்றன.
சினிமாவில் எப்போதுமே போட்டி பொறாமை என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. நடிகர்களுக்குள் அது இருந்தால் பரவாயில்லை. ஆனால் உதவியாளருக்கு கூட இப்படியான கொடுமைகள் நடக்க வேண்டுமா என நினைக்க வைக்கும் நிலையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.
செல்வம் அவற்றை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதுக்குறித்து செல்வம் கூறும்போது என்னை உதவியாளர் பணியில் விஜய்தான் வேலைக்கு வைத்தார். அவருக்கு குடை பிடிப்பதில் துவங்கி ஜூஸ் குடுப்பது வரை நாந்தான் எல்லாமே செய்து வந்தேன்.
இந்த நிலையில்தான் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்புக்காக நாங்க எல்லாம் மும்பை சென்றோம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது எதுவாக இருந்தாலும் விஜய் என்னைதான் அழைப்பார். இது அங்கு சிலருக்கு பிடிக்கவில்லை. அங்குள்ள ஹேட் ஸ்டைலிஸ்ட், மேக்கப் செய்பவர்கள் அனைவருக்கும் விஜய் என்னிடம் இவ்வளவு உரிமையாக இருப்பது பிடிக்கவில்லை.
என்னை வம்பு செய்தனர்
இதனால் அடிக்கடி என்னை வம்பு செய்து வந்தனர். நான் இல்லாத நேரத்தில் குடையை வளைத்துவிடுவது. ஜூஸ் கொண்டு செல்லும்போது அதன் ஸ்ட்ராவை எடுத்து எறிவது என செய்து கொண்டிருந்தனர். பிறகு ஊருக்கு வந்த பிறகு நான் விஜய்யிடம் சென்று நடந்ததை கூறினேன்.
நான் வேறு ஏதாவது வேலைக்கு சென்றுவிடுகிறேன் என கூறினேன். ஆனால் அவர் நான் தானே உன்னை வேலைக்கு வைத்தேன். படப்பிடிப்புக்கு வா பிரச்சனை வராமல் நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார்.

ஆனால் போன முதல்நாளே என்னை பொளார் பொளார் என்று அவர்கள் அடிக்க துவங்கிவிட்டனர். ஆனால் அதை நான் விஜய்யிடம் கூறவில்லை. ஆனாலும் தயாரிப்பாளரிடம் இதுக்குறித்து பேசியிருந்தார். எனவே தயாரிப்பாளர் அவர்களிடம் சென்று என்னிடம் பிரச்சனை செய்யக்கூடாது என சொல்லி வைத்தார்.
அப்புறம் சில சமயம் விஜய் சாரே என்கிட்ட கோபமா நடந்துகிட்டார். புலி படம் எடுத்தப்ப சூட்டிங் இடத்துக்கிட்டயே அவருக்கு தங்க ஏற்பாடு ஆனுச்சு. அன்னைக்கு அவருக்கு சாப்பாடு எல்லாம் தயார் செஞ்சு வச்சிட்டேன். யார்க்கிட்டயோ அப்போ போன்ல ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தார்.
தூக்கி போட்டு அடித்த விஜய்
அப்புறம்தான் வந்து சாப்பிட்டார். சாப்பிடும்போது கண்ணெல்லாம் சிவப்பா இருந்துச்சு. திடீர்னு என்ன கூப்பிட்டு சாப்பட்டை காட்டி இது என்னன்னு கேட்டார். சாப்பாட்டில் எதுவும் இல்லை. நான் பார்த்துட்டு ஒண்ணும் இல்லையே சார்னு சொன்னேன்.
என் கன்னத்திலேயே ஒரு அறை வச்சார். என் கண்ணாடி கீழ விழுந்துட்டு. அதை மாட்டிக்கிட்டு என்ன நடந்துச்சுனு புரியாம நிக்கிறேன். அடுத்து என் நெஞ்சுல ஒரு உதை விட்டார்.
அப்புறம் மறுநாள் வந்து மன்னிப்பு கேட்டார். யார் மேலயோ உள்ள கோபத்தை உங்க மேல காட்டிட்டேன். சாரின்னு சொன்னார். ஆனால் பிறகு அவர் உதவியாளரையும் மாத்திட்டார் என தகவலை பகிர்ந்துள்ளார் செல்வம்.






