News
கடைசி படத்துக்கு ஒரே அடியாக சம்பளத்தை ஏத்திய விஜய்!.. அதிர்ச்சியான தயாரிப்பாளர்!.. எவ்வளவு தெரியுமா?..
விஜய் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் செமையான வெற்றியை கொடுக்க கூடிய திரைப்படங்கள் ஆகும். இதனாலேயே விஜய்யின் படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் நடிகர் விஜய்யும் அவரது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறார். ஓ.டி.டியின் வருகைக்கு பிறகு ஒவ்வொரு நடிகருமே அவர்களது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களிலேயே விஜய்யின் சம்பளம் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார் விஜய். இதனை தொடர்ந்து அடுத்து அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு 250 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்த காரணத்தால் அந்த படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும். எனவே அதற்கு வரவேற்பும் அதிகமாக இருக்கும் என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இது அதிக தொகையாக தெரிவதால் இதுக்குறித்து விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.
