Connect with us

தோளில் இருந்து கையை எடுங்க!.. விஜய்க்கு வார்னிங் கொடுத்த மாணவி… விழாவில் நடந்தது என்ன?

vijay

News

தோளில் இருந்து கையை எடுங்க!.. விஜய்க்கு வார்னிங் கொடுத்த மாணவி… விழாவில் நடந்தது என்ன?

Social Media Bar

அரசியல் கட்சியை துவங்கியது முதலே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

போன வருடம் முதலே அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்குவதை ஒரு விஷயமாக செய்து வருகிறார் விஜய்.

இது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது இது பலராலும் அப்போதே பாராட்டப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது என்றாலும் அப்பொழுது சூர்யா இதற்கு எதிர்மறையான விமர்சனம் ஒன்றை முன் வைத்திருந்தார்.

விஜய் செய்யும் உதவி:

அவருடைய அகரம் அறக்கட்டளை மூலமாக அவர் தொடர்ந்து பல மாணவர்களுக்கு உதவி வருகிறார் என்பது பலரும் அறிந்த விஷயமே அவரது குறித்து கூறும் பொழுது அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட நலிவடைந்தவர்களுக்கு தான் உதவிகள் தேவையாக இருக்கிறது என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வருடம் இரண்டாவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் விஜய். இந்த விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டது வந்தது. அங்கே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது.

மாணவியிடம் சர்ச்சை:

போன வருடமும் இதே போல நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டனர் இந்த நிலையில் ஒரு மாணவிக்கு சால்வையை போர்த்திய விஜய் அந்த மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

அப்பொழுது அந்த மாணவி விஜய்யை அழைத்து அவரது காதில் ஏதோ கூறிய பிறகு அவர் உடனே அந்த பெண்ணின் தோளிலிருந்து தனது கையை எடுத்துக் கொண்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இருந்தாலும் விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். கண்டிப்பாக அந்த பெண் தோளிலிருந்து விஜயின் கையை எடுக்க சொல்லி இருப்பார்.

அதனால்தான் விஜய் உடனே கையை எடுத்து இருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கின்றன மேலும் நெட்டிசன்களை இது குறித்து கேட்கும் பொழுது ஏன் விஜய் இப்படி மாணவிகளின் தோளில் கையை போட வேண்டும் என்றும் ஒரு பக்கம் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம் இது நட்பு ரீதியாக சிறுமி என்று விஜய் தோளில் கையை போட்டதை பலரும் திரித்து பேசுகின்றனர் என்கின்றனர் தளபதி ரசிகர்கள். பொதுவாகவே ரசிகர்கள் தோளில் கை போட்டு பேசுவதை விஜய் வாடிக்கையாகதான் கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் தோளில் இருந்து கையை எடுக்க சொன்னார் என கூறியதாக கூறுவதும் திரிக்கப்பட்டதே என அவர்கள் கூறுகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top