Connect with us

முருக பக்தியால் நடந்த விளைவு.. சுய நினைவு இல்லாமல் தவித்த விஜய் சேதுபதி..!

vijay sethupathi murugan

Latest News

முருக பக்தியால் நடந்த விளைவு.. சுய நினைவு இல்லாமல் தவித்த விஜய் சேதுபதி..!

தமிழ் சினிமாவில் மதிப்பு மிக்க சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்காமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் ஒரு சிலர்தான் தமிழ் சினிமாவில் உண்டு.

அப்படியான நடிகர்களில் நடிகர் தனுஷும் விஜய் சேதுபதியும் முக்கியமானவர்கள். முக்கியமாக விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு சம்பளத்தை குறைவாக வாங்கிக்கொண்டு கூட நடித்துக் கொடுக்கக்கூடியவர் என்று கூறப்படுகிறது.

அப்படியாக கடைசி விவசாயி திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அந்த திரைப்படத்தின் கதைப்படி முதலில் காட்டும் போது அது ஒரு மனநல பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக தெரிந்தாலும் ஆன்மீக ரீதியாக முருகனுடன் தொடர்புபடுத்தும் ஒரு கதாபாத்திரமாக அது இருக்கும்.

முருகன் கதாபாத்திரம்:

அந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதில் கூறும் பொழுது ஒரு காட்சியில் தமிழ்நாட்டை இப்பொழுது யார் ஆண்டு கொண்டு இருக்கிறார் என்று அவர் கேட்கும் பொழுது அதற்கு விஜய் சேதுபதி முருகன் தான் அவன் தானே எப்பொழுதுமே என்று ஒரு பதிலை கூறுவார்.

vijay-sethupathi-2
vijay-sethupathi-2

அந்த காட்சியை படமாக்கும் பொழுது உண்மையிலேயே பிரமித்து போய்விட்டதாக விஜய் சேதுபதி கூறினார். அப்படியான ஒரு தெய்வீகத்திற்குள் நான் இதுவரை சென்றது கிடையாது. அதை இரண்டே வசனங்களில் இயக்குனர் வெளிப்படுத்தும் போது என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அதிர்ந்து போன விஜய் சேதுபதி:

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சிம்பிளாக கூறிவிட்டார் என்று எனக்கு தோன்றியது. அதேபோல அந்த முதியவருடன் சாப்பிடும் காட்சி படமாக்கும் பொழுது அந்த இடத்தில் எனக்கு எதுவுமே புரியவில்லை. சொல்லப்போனால் அந்த இடத்தில் ஒரு நடிகராகவே நான் இல்லை.

கிட்டத்தட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தேன். பிறகு இந்த படம் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு தெலுங்கில் ஒரு பெண்மணி என்னிடம் பேசும் பொழுது இதேபோல கைகளில் வாட்ச் கட்டிக் கொண்டு மனநல பாதிக்கப்பட்டு சுற்றும் ஆள் எங்கள் ஊரிலும் உண்டு என்று கூறி அந்த கடைசி விவசாயி கதாபாத்திரம் பற்றி பேசி இருந்தார்.

என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி அப்படியாக அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறி நிறைய காட்சிகளில் என்ன நடக்கிறது என்று புரியாமல் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

Latest News

tsr dharmaraj
vairamuthu ilayaraja
anirudh ilayaraja
To Top