Cinema History
ரஜினி பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல காத்திருந்த விஜய்!.. அப்போ ரஜினி செய்த காரியம்தான் ஹைலைட்!.
Vijay and Rajinikanth: விஜய்யும் ரஜினிகாந்தும் இப்போது சண்டை போட்டுக்கொள்ளும் நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் எல்லோரும் நட்பாகதான் இருந்து வந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு வரை சினிமா பிரபலங்களுக்கு இந்த அளவிற்கான மார்கெட் இருக்கவில்லை.
சினிமாவில் தங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் எளிதாக நடிகர்களை அவர்களது படப்பிடிப்பு தளங்களிலேயே காண முடியும்.
ஆனால் அதற்கெல்லாம் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இப்போது சினிமா பிரபலங்களின் உயரம் என்பது எங்கோ சென்றுவிட்டது. இதுவே தற்சமயம் சினிமாவில் போட்டிகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.
முன்பு இப்படி இல்லாததால் அனைத்து நடிகர்களும் நல்ல நட்பில் இருந்துள்ளனர். விஜய்யும் ரஜினிகாந்தும் கூட அப்படி நல்ல நட்பில் இருந்துள்ளனர். முக்கியமாக அப்போதெல்லாம் விஜய் ரஜினிகாந்தின் மிகப்பெரும் ரசிகராக இருந்தார்.

அவர் நடிக்கும் சில திரைப்படங்களில் கூட ரஜினிகாந்த் ரசிகராக நடித்திருப்பார் விஜய். விஜய் படமான நெஞ்சினிலே திரைப்படம் கொஞ்சம் ஆவரேஜான பாடல் என்றாலும் அதில் வரும் தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா என்கிற பாடல் மிகவும் பிரபலமானது.
அந்த பாடலின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது பக்கத்து செட்டில் ரஜினிகாந்த் நடிக்கும் படையப்பா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. அன்று ரஜினிகாந்திற்கு பிறந்தநாள். எனவே தலைவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் விஜய்.
எனவே அங்கு படையப்பா படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தார். இதனை அறியாத ரஜினிகாந்த் வெகு நேரமாக படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் விஜய் நிற்பதை மாடியில் இருந்து பார்த்த ரஜினி உடனே ஏய் விஜய் என அழைத்துள்ளார்.
எங்கு சத்தம் வருகிறது என விஜய் பார்ப்பதற்குள் வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி விஜய்யை வந்து பார்த்தார் ரஜினிகாந்த். பிறகு அவருக்கு வாழ்த்து சொன்ன விஜய் அவரோடு வெகுநேரம் பேசியுள்ளார். இப்படியெல்லாம் இருவரும் அப்போது நட்பாக இருந்துள்ளனர்.
