Connect with us

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

karthi ameer

Tamil Cinema News

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

Social Media Bar

தமிழ் சினிமாவில் மிகவும் தாமதமாக வந்து சீக்கிரமே கதாநாயகன் ஆனவர் நடிகர் கார்த்தி. விஜய் அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் 20களின் ஆரம்பங்களிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கினர்.

ஆனால் கார்த்தி தனது 27வது வயதில்தான் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர்தான்.

ஆனால் சில காரணங்களால் அமீருக்கும் கார்த்திக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்த நிலையில் கார்த்தி 25 திரைப்படங்களில் நடித்ததை கொண்டாடும் விதமாக கார்த்தி 25 எனும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை கார்த்தியோடு பணிப்புரிந்த பலரும் கலந்துக்கொண்டனர்.

ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் அதில் இல்லை. இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அமீர் கார்த்தி தன்னை அழைக்கவே இல்லை. அதனால்தான் அந்த விழாவிற்கு செல்லவில்லை என கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார், உண்மையில் கார்த்தி அமீரை அழைப்பதற்கு ஆள் அனுப்பியிருக்கிறார். ஆனால் இவ்வளவு நாள் என்னை கண்டுக்கொள்ளாமல் இப்போது மட்டும் நீங்கள் அழைத்ததும் நான் வரவேண்டுமா என சத்தமிட்டுள்ளார்.

மேலும் அந்த விழாவிற்கு வரமுடியாது என கூறினார். எனவேதான் அவரை மீண்டும் அவரை அழைக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

To Top