Tamil Cinema News
நன்றி மறந்துட்டாரா விஜய்.. கேப்டன் நினைவு நாளுக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்?.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை தொடுவதற்கு உதவியாக இருந்த பிரபலங்களின் நடிகர் விஜயகாந்தும் முக்கியமானவர்.
நடிகர் விஜய் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்த காலகட்டங்களிலேயே தனது திரைப்படத்தில் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.
அந்த நன்றியை மறக்காமல்தான் கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு காட்சி வைத்திருந்தார் நடிகர் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் குருபூஜை ஒன்று நடத்தப்பட்டது.
இந்த குருபூஜைக்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர் ஆனால் நடிகர் விஜய் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகர் விஜய் விஜயகாந்தை மறந்துவிட்டாரா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் விஜயகாந்த் இறப்பின் பொழுது அதற்காகவே அந்த நாளில் கலந்து கொண்டு சென்றார் விஜய். அப்படி இருக்கும் விஜய் எப்படி முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு வராமல் இருப்பார் என்றும் கேள்விகள் இருந்தது.
ஆனால் இது குறித்து தகவல்கள் வேறு மாதிரி வருகின்றன அதாவது தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர்கள் இதில் கலந்து கொள்வதற்கு போலீசிடம் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.