Connect with us

பேன் இந்தியா பட வாய்ப்பை மிஸ் செய்த விஜய் சேதுபதி! நடிச்சிருந்தா சிறப்பா இருந்திருக்கும்!..

பேன் இந்தியா பட வாய்ப்பை மிஸ் செய்த விஜய் சேதுபதி! நடிச்சிருந்தா சிறப்பா இருந்திருக்கும்!..

Social Media Bar

சில படங்களின் கதைகள் கேட்கும் பொழுது மிகவும் ஆவரேஜான கதையாக தெரிந்தாலும் கூட படமாக வரும்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடும். அப்படி இந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் புஷ்பா.

இந்திய சினிமாவில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, சமந்தா மற்றும் ஃபகத்ஃபாசில் போன்றோர் நடித்திருந்தனர். ஆனால் முதல் முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு இவர்களை தேர்வு செய்யவில்லை.

கதாநாயகனாக மகேஷ் பாபுதான் தேர்வு செய்யப்பட்டார். நடிகை சமந்தாதான் படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல ஹிந்தி நடிகை நோரா ஃபெத்திதான் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி பகத் பாஸில் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்வானார். ஆனால் இவர்கள் அனைவருமே படத்தின் கதையை கேட்ட பிறகு மிகவும் சுமாரான கதை என்று படத்தை நிராகரித்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக நடிகர்களையும் மாற்ற வேண்டி இருந்தது.

ஆனால் மாற்றிய பிறகு அதில் நடித்த அனைவருக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்துவிட்டது புஷ்பா. இத்தனைக்கும் அந்த போலீஸ் காதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரமாகும் இருந்தாலும் ஏன் விஜய் சேதுபதி அதில் நடிக்கவில்லை என தெரியவில்லை.

Articles

parle g
madampatty rangaraj
To Top