கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு இருந்து வருகிறார்.
யோகி பாபுவுக்கு முன்பு காமெடி நடிகர்களாக நடித்த பலரும் இப்பொழுது கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு அதிகம் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.
நடிகர் யோகி பாபுவும் கூட அவ்வப்போது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் கூட அவர் அடிக்கடி காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கான கேரவனை அவர்களே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அதற்கான வாடகையை மட்டும் தயாரிப்பாளரிடம் வசூலித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதே மாதிரி யோகிபாபுவும் அவருக்கான கேரவனை அவரே வாங்கி இருக்கிறாராம். ஆனால் அந்த கேரவனுக்கான வாடகை செலவு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய். இந்த 40 ஆயிரம் ரூபாயை அவரது மனைவி கணக்கிற்கு அனுப்பினால் தான் அவர் மறுநாள் நடிப்பதற்கே வருவாராம் இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.