Latest News
ஆதார் கார்டுக்கு பின்னால் உள்ள கதையை கூறும் புதிய சீரிஸ் – இவ்வளவு வேலை நடந்துருக்கா?..
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் ஒரு அடையாள சான்றாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. இப்போது இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆதார் அட்டை மாறிவிட்டது என கூறலாம்.
அந்த அளவிற்கு எந்த ஒரு அரசு சார்ந்த விஷயங்களை அணுகினாலும் அங்கு முக்கிய ஆதாரமாக ஆதார் அட்டைதான் கேட்கப்படுகிறது. இப்படி பல கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் ஆதார் அட்டை உருவானதுக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.
தற்சமயம் அதை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளனர். 12 டிஜிட் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்னும் இந்த ஆவணப்பட டாக்குபே என்னும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி என்கிற இரண்டு ஆட்சியாளர்களின் பெரும்பங்கு ஆதார் அட்டை உருவாக்கத்தில் உள்ளது.
அதை விவரமாக விவரிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. அரசால் நியமிக்கப்படும் ஒரு குழு பல பிரச்சனைகளை தாண்டி பொது மக்களுக்கான இந்த ஆதார் அமைப்பை எப்படி உருவாக்குகின்றனர் என்பதை இந்த ஆவணப்படத்தில் விளக்கியுள்ளனர்.
நேற்று வெளியான நிலையில் தற்சமயம் இந்த ஆவணப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.