Connect with us

ஊரான் வீட்டு காசா இது!.. மணிரத்தினம் செயலால் படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்!.. பிறகு கமல் செஞ்சதுதான் சம்பவம்!..

Kamalhaasan manirathnam

Cinema History

ஊரான் வீட்டு காசா இது!.. மணிரத்தினம் செயலால் படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்!.. பிறகு கமல் செஞ்சதுதான் சம்பவம்!..

cinepettai.com cinepettai.com

Kamalhaasan : தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். கமல் ரஜினி காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை மணிரத்தினத்தின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை எனலாம்.

அந்த அளவிற்கு தனது திரைப்படங்களில் தனிப்பட்ட காட்சி அமைப்புகளை உருவாக்க கூடியவர் மணிரத்தினம். ஆனால் படத்தை இயக்குவதை பொறுத்தவரையில் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜிற்கு இருக்கும் திறன் மணிரத்தினத்திற்கு கிடையாது என கூறப்படுகிறது.

பாரதிராஜாவும் பாக்கியராஜும் குறைவான ஃபிலிம் ரோல்களை பயன்படுத்தியே படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். ஆனால் மணிரத்தினம் நிறைய ஃபிலிம் ரோல்களை தேவையில்லாமல் செலவு செய்பவர் என சினிமாவில் உள்ளவர்களே கூறுவதுண்டு.

இந்த நிலையில் கமல்ஹாசனை வைத்து நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுத்துக்கொண்டிருந்தார் மணிரத்தினம். அதில் மாலை நேரத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சரியாக முகம் தெரியவில்லை என மறுநாள் மீண்டும் அதே காட்சியை படமாக்க இருந்தார் மணிரத்தினம்.

ஆனால் அதற்கான ஃபிலிம் ரோலை தர முடியாது, அந்த காட்சிக்காக ஒதுக்கப்பட்ட ஃபிலிம் ரோல் முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் கூறிவிட்டார். எனவே அன்று படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் அப்போதுதான் அவரது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருந்தார்.

அங்கிருந்து தேவையான ஃபிலிம் ரோலை எடுத்து வந்து அந்த படப்பிடிப்பை நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

POPULAR POSTS

tms trajendar
gv prakash
gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
To Top