Latest News
படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.
Jigarthanda Double X : தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் முக்கியமாக திரையில் வெளியாகின. அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா சேர்ந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். மற்றொன்று கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம்.
ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகப்பட்சம் படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.
ஆனால் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசும்போது அந்த திரைப்படம் தனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மக்கள் கொண்டாடும் அளவிற்கு எல்லாம் அது சிறப்பான படம் இல்லை என கூறியுள்ளார்.
படத்தின் கதைப்படி கதை 1975 இல் நடப்பதாக இருக்கிறது. இதில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கிறார். அவரே முக்கிய வில்லி கதாபாத்திரமாக இருக்கிறார். இதுக்குறித்து செய்யாறு பாலு கூறும்போது அவர்கள் ஜெயலலிதாவைதான் அந்த பெண் கதாபாத்திரத்தில் காட்டியுள்ளனர். அதே போல அதில் நடிகர் கதாபாத்திரத்தில் வருபவர் எம்.ஜி.ஆர்தான்.
ஜெயலலிதாதான் சந்தன கடத்தல் வீரப்பனை வளர்த்துவிட்டார் என்பது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்தான் வீரப்பனை கொன்று அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினார்.
அதே போல எம்.ஜி.ஆர் பதவிக்காக மலிவான வேலைகளை பார்த்தார் என படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படி அரசியல் சார்ந்து ஜிகர்தண்டாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்று படம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் செய்யாறு பாலு.