Connect with us

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

jigarthanda double x

Latest News

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

cinepettai.com cinepettai.com

தீபாவளியை முன்னிட்டு தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் திரைப்படத்தையும் விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன.

பழங்குடி இன மக்கள் மத்தியில் அரசு நிகழ்த்தும் அதிகார மீறல்களை காட்டும் அதே வேளையில் ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கான விஷயங்களையும் இதில் சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இந்த படம் அதிகமான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படம் முடியும்போது ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கான தொடக்கத்தை வைத்து படத்தை முடித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ஜிகர்தண்டா படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இதுக்குறித்து தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கு இன்னமும் கதை கூட எழுதவில்லை. ஆனால் அப்படி ஒரு படம் எடுக்க ஆசை இருக்கிறது. ஆனால் பல வருடங்கள் கழித்தே அடுத்த பாகத்தை எடுப்பேன். எனவே இப்போது யாரும் அதை எதிர்பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top