Connect with us

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

raghva lawarance

Latest News

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

cinepettai.com cinepettai.com

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக லாரன்ஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் லாரன்ஸ் நடித்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான படமாக வந்தது.

இந்த படம் குறித்து அவர் தன் பேட்டியில் கூறும்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிகவும் கோபமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். எப்போதுமே லாரன்ஸ் மூன்று வேளை சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட கூடியவர். அவருக்கு சாப்பாடு காலதாமதம் ஆனால் மிகவும் கோபம் வருமாம்.

எனவே அந்த காட்சியின் போது சாப்பிடாமல் நின்று படப்பிடிப்பில் நடித்துள்ளார் லாரன்ஸ். முக்கியமாக அதற்கு முந்தைய காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டி இருந்ததாம். அப்போது அவரிடம் லாரன்ஸ் முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுங்க என கூறியுள்ளார்.

படப்பிடிப்பை முடித்து வந்த எஸ்.ஜே சூர்யா சிறப்பா பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற பயத்திலேயே அந்த படப்பிடிப்பில் சாப்பிடாமல் நடித்துள்ளார் லாரன்ஸ்.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top