Connect with us

காதலியோட நடந்த பிரச்சனையை அப்படியே படத்துல வச்சேன்!.. திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா செய்த வேலை!..

sj surya

Cinema History

காதலியோட நடந்த பிரச்சனையை அப்படியே படத்துல வச்சேன்!.. திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா செய்த வேலை!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை மட்டுமே வைத்து மட்டுமே படம் எடுத்த இயக்குனர் என்றால் அது எஸ்.ஜே சூர்யாவாக மட்டும்தான் இருக்க முடியும். ஏனெனில் அஜித்தை வைத்து வாலி மற்றும் விஜய்யை வைத்து குஷி ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியப்பிறகு எஸ்.ஜே சூர்யா வேறு எந்த நடிகரையும் வைத்து படம் இயக்கவில்லை.

அவர் இயக்கும் திரைப்படங்களில் அவர்தான் கதாநாயகனாக நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

ஒரு பேட்டியில் தனது கடந்தக்கால காதல் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை எஸ்.ஜே சூர்யா கூறியிருந்தார். அவர் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்தப்போது அந்த பெண் அவரை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்திருந்தார். ஆனால் அந்த நாளில் ஒரு தயாரிப்பாளரும் படம் குறித்து பேச அழைத்திருந்தார்.

anbe aaruyire
anbe aaruyire

இதை காதலியிடம் கூறினால் கடுப்பாகிவிடுவார் என நினைத்த எஸ்.ஜே சூர்யா. சாப்பிட போய்விட்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விடலாம் என முடிவு செய்தார். ஆனால் அங்கு சென்று உணவு வரவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. பிறகு தனது காதலியிடம் முக்கியமாக வெளியே செல்ல வேண்டும் என கூறிய எஸ்.ஜே சூர்யா அங்கிருந்த உணவை வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கடுப்பான காதலி வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு இரவு 12 மணிக்கு சென்று காதலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா. இந்த விஷயத்தை அப்படியே அன்பே ஆருயிரே திரைப்படத்தில் அவர் காட்சியாக வைத்திருந்தார்.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top