Connect with us

World Cinema : 29 வருஷத்துக்கு ஒருமுறை பிணமெல்லாம் எழுந்திருக்கும்!.. அடி வயிற்றை கலக்கும் இந்தோனிய படம்!.. ரொம்ப பயந்து வருதே!.

satan slave communion

Hollywood Cinema news

World Cinema : 29 வருஷத்துக்கு ஒருமுறை பிணமெல்லாம் எழுந்திருக்கும்!.. அடி வயிற்றை கலக்கும் இந்தோனிய படம்!.. ரொம்ப பயந்து வருதே!.

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் பொதுவாக பேய் படம் என்றாலே நல்லெண்ணம் கொண்ட ஒருவர் இருப்பார். அவரை ஒரு சில காரணங்களுக்காக கெட்டவர்களான சிலர் கொலை செய்திருப்பர். அப்படி கொலை செய்யப்பட்டவர்கள் கெட்டவனை பலி வாங்குவதற்காக பேயாக காத்திருப்பர்.

அந்த சமயம் பார்த்து எதார்த்தமாக அந்த பக்கம் வரும் கதாநாயகன் அல்லது பெண் மீது ஏறும் அந்த ஆத்துமா அந்த கெட்டவனை பழி வாங்கும். முனி, அரண்மனை என எல்லா படத்திலும் இதுதான் கதை. ஆனால் உலக சினிமாவை பொறுத்தவரை பல்வேறு மாறுப்பட்ட கதை அம்சத்தை கொண்ட பேய் திரைப்படங்கள் வெளிவருவதை பார்க்க முடியும்.

இந்தோனிசியாவில் வெளியாகி அனைவரையும் குலை நடுங்க செய்த திரைப்படம்தான் சாத்தான் ஸ்லேவ் (satan Slave) என்னும் திரைப்படம். சாத்தானுக்கு தத்து கொடுத்து குழந்தையை பெறும் ஒரு தம்பதியினரிடம் திரும்ப சாத்தான் அந்த குழந்தையை கேட்டு வருவதாக படத்தின் கதை இருக்கும்.

அதன் இரண்டாம் பாகத்தை பற்றிதான் நாம் பார்க்க போகிறோம். சாத்தான் ஸ்லேவ் 2 கம்யூனியன் (Satan’s Slaves 2: Communion) என்னும் இந்த திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. 1955 இல் இந்தினோசியாவில் உள்ள ஒரு பகுதியில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடக்கிறது. அங்கு ஒரு சின்ன குடிசையில் நிறைய பிணங்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது.

முதல் நாள் இரவு அவை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எழுந்து அங்கு வந்திருந்தன. ஆனால் போலீஸ் போய் பார்க்கும்போது அவை உயிரற்ற நிலையிலேயே இருக்கின்றன. என்னவென்று அறியாத போலீஸார் அவற்றை அப்புறப்படுத்துகின்றனர்.

பிறகு அந்த இடம் இடிக்கப்படுகிறது. அங்கு மிகப்பெரிய குடியிருப்பு கட்டப்படுகிறது. அடுத்து கதை நடக்கும் காலக்கட்டம் 1984. பஹ்ரி என்னும் நபரின் குடும்பம் இந்தோனிசியாவில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு வாடகைக்கு வருகின்றனர். அவர்கள் குடி வந்த பிறகு அங்கு அடிக்கடி சில பயமுறுத்தும் விஷயங்களை அவர்கள் பார்க்கின்றனர்.

ஆனால் அவை பிரம்மை என அவர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில் ஒருநாள் அந்த குடியிருப்பில் உள்ள லிஃப்ட் பழுதாகி கீழே விழுகிறது அதில் மொத்தமாக 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்த சமயம் பார்த்து குடியிருப்பிற்கு கீழ் வெள்ளம் சூழ்கிறது. அந்த நீரில் மின்சார வயரும் தொட்டிருப்பதால் அதில் காலை வைத்தாலே அவர்கள் இறந்து போக வேண்டியதுதான்.

எனவே பிணங்கள் அவரவர் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அந்த சம்பவம் நடக்கிறது. அதாவது 1955 இல் பிணங்கள் ஒரு இடத்தில் கூடியது அல்லவா!. அங்குதான் இவர்கள் வாழும் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த இடம் சாத்தானால் சபிக்கப்பட்ட இடம்.

29 வருடத்திற்கு ஒருமுறை அங்கிருக்கும் பிணங்கள் எழுப்பப்பட்டு சாத்தனுக்கு அடிமையாகி மனிதர்களை கொலை செய்யும். அதே நாளில் சாத்தானும் வந்து அந்த பிணங்களுக்கு காட்சி கொடுக்கும். இந்த நிலையில் வெள்ளம் வந்த அந்த நாளின் இரவில் பிணங்கள் எல்லாம் உயிர் பெறுகின்றன. அவற்றிடம் இருந்தும் சாத்தானிடம் இருந்தும் குடியிருப்பை சேர்ந்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

மிகவும் த்ரில்லரான இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ஒளிப்பரபானது.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top