ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டில் அடிக்கடி திரைப்படங்கள் வருவதுண்டு. ஜான் விக் மாதிரியான நிறைய படங்களில் காட்சி அமைப்பு அப்படிதான் இருக்கும். ஒரு இரவில் பெரிய கேங்ஸ்டர் குழு கதாநாயகனை முற்றுகையிடும்.
அப்போது கதாநாயகன் அவ்வளவு பேரையும் சமாளித்து வெற்றி பெறுவான். பெரும்பாலும் விடியும்போது கதை முடிந்துவிடும். அதே மாதிரியான அம்சத்தில்தான் தமிழில் கைதி திரைப்படமும் வந்தது. அதன் பிறகு அதன் வெற்றியை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் ஒரு இரவில் நடப்பது போன்ற கதை களத்தில் வந்தன.
இப்போது அர்ஜுன் நடித்து அடுத்து வரும் படமும் அந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் Blast என்கிற இந்த திரைப்படத்தில் அர்ஜூன், ப்ரீத்தி முகுந்த் அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.
சுபாஷ் கே ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கதை
படத்தின் கதைப்படி அர்ஜூன் ஒரு கராத்தே மாஸ்டராக இருந்து வந்துள்ளார். அவர் தனது மகளை சிறு வயது முதலே மிகவும் தைரியசாலியாக வளர்க்கிறார். எந்த ஒரு தவறு நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும் என சொல்லி வளர்க்கிறார்.

வளர்ந்த பிறகு மகள் ப்ரீத்தி முகுந்த் ஒரு மெடிக்கலில் வேலை பார்க்கிறார். அங்கு கேங்க்ஸ்டர் செய்யும் ஒரு அநீதியை அவர் போலீசில் சொல்லிவிடுகிறார். இதனை அடுத்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பம் பற்றி கேங்ஸ்டர் குழு விசாரிக்கிறது.
அப்போது அர்ஜுன் ஹெச்.எம் வேலையில் இருப்பதாகவும் மனைவி ஹவுஸ் வைஃப் ஒரு மகள். ஒரு சாதாரண குடும்பம்தான் அவர்கள் குடும்பம் என தகவல் வருகிறது. சரி என அந்த குடும்பத்தை கொல்ல சொல்லி உத்தரவிடுகிறான் அந்த கேங்ஸ்டர்.
இதனை அடுத்து ஒரு பெரிய கும்பல் அவர்களை போட்டு தள்ள இரவில் அர்ஜுன் வீட்டுக்குள் நுழைகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அர்ஜுனுக்கு மட்டுமின்றி மகள் ப்ரீத்தி முகுந்த் மனைவி அபிராமி எல்லோருமே கராத்தே தெரிந்தவர்கள்.
குடும்பத்தை கொல்ல சென்ற கும்பல் அந்த கராத்தே குடும்பத்திடம் மாட்டுகிறது. அதனை தொடர்ந்து இந்த கேங்ஸ்டர் எப்படி முறியடிக்கப்படுகிறான் என்பதுதான் கதையாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.






