முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது முதலே அவர் மக்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்டங்களை செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தொடர்ந்து புதிய புதிய திட்டங்களை அமல்ப்படுத்தி வருகிறார் விஜய்.
அதே சமயம் விஜய் தற்சமயம் செய்திருக்கும் ஒரு விஷயம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் தன்னுடைய தனிப்பட்ட ஜோசியருக்கு அரசு பதவி கொடுத்தது அதிக சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த நிலையில் த ரூட் (Route) என்கிற தனியார் நிறுவனத்திற்கு பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்வதற்கான அரசு அதிகாரத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
ரூட்ஸ் எனும் அமைப்பு ஜெகதீஸ் என்பவரால் நடத்தப்படும் ஒரு பீ.ஆர் நிறுவனம் ஆகும். ஜெகதீஸ் பழனிசாமி சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில் மாஸ்டர், லியோ, மகாராஜா போன்ற படங்களை தயாரித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர் நடிகைகளான விஜய், கீர்த்தி சுரேஷ், சமந்தா, கல்யாணி ப்ரியதர்ஷன், ராஷ்மிகா, பூஜா ஹெக்தே, லோகேஷ் கனகராஜ் என இன்னும் பல பிரபலங்களுக்கு விளம்பரம் செய்யும் வேலையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் கட்சி துவங்கிய காலம் முதலே அவரை விளம்பரப்படுத்துவது, ட்ரெண்ட் செய்வது போன்ற வேலைகளை ரூட்தான் செய்து வருகிறது. இந்நிலையில் விஜய் முதலமைச்சரான பிறகு இந்த ரூட் அமைப்பிற்கு பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக மோசமாக வரும் கருத்துக்களை ரூட் அமைப்பால் தணிக்கை செய்ய முடியும். ஏற்கனவே த.வெ.கவுக்கு எதிராக செயல்ப்பட்ட சில எக்ஸ் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது கருத்து சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்கிற கேள்வி எழுந்து வருகிறது.








