Connect with us

என்கிட்ட மறைச்சிதான் சசி படம் பண்ணுனான்!.. என்ன காரணம்.. விளக்கிய இயக்குனர் அமீர்!..

sasikumar ameer

Cinema History

என்கிட்ட மறைச்சிதான் சசி படம் பண்ணுனான்!.. என்ன காரணம்.. விளக்கிய இயக்குனர் அமீர்!..

cinepettai.com cinepettai.com

Director Sasikumar : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழில் பெரும் இயக்குனராக தனது காலடித்தடத்தை பதித்தவர் இயக்குனர் அமீர். அமீர் முதல் முதலாக மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

பாலாவிற்கும் சரி அமீருக்கும் சரி அவர்களது முதல் படம் துவங்கிய காலகட்டம் முதலே அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் சசிகுமார். மௌனம் பேசியதே படத்திலும் அவர் வேலை பார்த்தார். அதன் பிறகு அமீர் இயக்கிய ராம் திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்தார்.

அதன் பிறகு மூன்றாவது படமாக அமீர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கும்போது சசிகுமார் தனது சொந்த படத்திற்கான கதையை எழுத சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமுத்திரகனியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் அமீர்.

இந்த நிலையில்தான் சசிகுமார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் கதையை எழுதினார். அந்தப் படத்தை முதலில் அமிர்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பருத்திவீரன் படத்தில் நடந்த பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தை அமீரால் தயாரிக்க முடியவில்லை.

எனவே சசிக்குமாரே அந்த படத்தை தயாரிக்கிறேன் என்று அமீரிடம் கூறிவிட்டு சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தயாரித்தார். படத்தை தயாரிக்கும் பொழுது அதில் சசிகுமார் நடிப்பதை அமீரிடம் கூறவே இல்லை. அதன் பிறகு படபிடிப்பு எல்லாம் முடிந்த பிறகுதான் அந்த படத்தில் தான் நடித்திருப்பதையே சசிகுமார் அமீரிடம் கூறினார்.

முதலில் இதை கேட்டு அமீர் கோபமடைந்தாலும் சுப்ரமணியம் திரைப்படத்தை பார்த்தபொழுது அமீருக்கே மிகவும் வியப்பாக இருந்தது சசிகுமார் இந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதை அப்போதுதான் அமீர் தெரிந்துக் கொண்டார் இந்த விஷயத்தை அமீரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

POPULAR POSTS

karthik subbaraj
ajith
dhanush-karthik-kumar
shivani narayanan
dhanush suchitra
To Top