Connect with us

மூணு படத்துக்கு கதை வச்சிருக்கேன்!.. இயக்குனராக களம் இறங்கும் ஜெயம் ரவி.. அந்த மனுசன் நிலைமை இப்படி ஆயிடுச்சே!.

jayam ravi

Latest News

மூணு படத்துக்கு கதை வச்சிருக்கேன்!.. இயக்குனராக களம் இறங்கும் ஜெயம் ரவி.. அந்த மனுசன் நிலைமை இப்படி ஆயிடுச்சே!.

cinepettai.com cinepettai.com

Jayam Ravi : ஜெயம் ரவிக்கு இது என்ன கால கட்டம் என்று தெரியவில்லை. அவருக்கு மட்டும் தொடர்ந்தது தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன. பூமி திரைப்படத்தில் துவங்கி வரிசையாக தோல்வி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி.

அதற்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் இப்போது வந்த சைரன் திரைப்படம் வரை எதுவுமே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே ஜெயம் ரவிக்கு பேசக்கூடிய ஒரு திரைப்படமாக இருந்தது.

ஒரு காலத்தில் தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம் என்று வரிசையாக வித்தியாசமான திரைப்படங்களாக நடித்து வந்த ஜெயம் ரவி எப்பொழுது கிரைம் திரைப்படங்களாக நடிக்க துவங்கினாரோ அப்பொழுது முதல் அவருக்கான மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைய தொடங்கியுள்ளது.

jayam-ravi
jayam-ravi

இந்த நிலையில் இனிமேல் தானே திரைப்படத்தை இயக்கி நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம் ஜெயம் ரவி.  தற்சமயம் ஏற்கனவே மூன்று சிறப்பான கதைகளை கைவசம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. இதில் ஒரு திரைப்படத்தில் மட்டும் வேறு யாரையாவது கதாநாயகனாக போட்டு அந்த படத்தை இவர் இயக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

மற்றொரு திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன் கொண்ட கதையாகும் அதில் ஜெயம் ரவி ஒரு கதாநாயகனாகவும் இன்னொரு கதாநாயகனாக வேறொரு நடிகரையும் வைத்து படமாக்க இருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தில் ஜெயம் ரவி மட்டுமே கதாநாயகனாக நடித்து அவரே இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இனி தொடர்ந்து தன்னுடைய இயக்கத்திலேயே படங்களை நடித்து வெளியிட்டு வெற்றி பெற முயற்சி செய்ய இருக்கிறார் ஜெயம் ரவி என்பது இதன் மூலம் தெரிகிறது.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top