Connect with us

விஜய்யை திட்டுறதுக்காகதாங்க அந்த பாட்டை போட்டோம்!.. இப்ப வந்திருந்தா கிழிச்சிருப்பாங்க!.. பகிரங்கமாக கூறிய இசையமைப்பாளர்!.

vijay ajith

Cinema History

விஜய்யை திட்டுறதுக்காகதாங்க அந்த பாட்டை போட்டோம்!.. இப்ப வந்திருந்தா கிழிச்சிருப்பாங்க!.. பகிரங்கமாக கூறிய இசையமைப்பாளர்!.

cinepettai.com cinepettai.com

நடிகர்களுக்கிடையே போட்டி என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து வரும் விஷயங்கள்தான். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தை போல எப்போதுமே இருந்தது கிடையாது என கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் பெரும் சண்டை போட்டுக்கொள்வார்களாம். அந்த அளவிற்கு பெரும் சண்டைக்காரர்களாக இரண்டு ரசிகர்களும் இருந்துள்ளனர். அதற்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் ரசிகர்களுக்கிடையே இப்படியான சண்டைகள் உண்டு என்றாலும் ரஜினி கமல்ஹாசன் இடையே அவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை.

ஆனால் அதையெல்லாம் தாண்டி விஜய்க்கும் அஜித்திற்கும் இடையே சண்டைகள் நடந்துள்ளன. பொதுவாக இதுமாதிரியான நடிகர்களிடையே போட்டிகள் சமாச்சாரத்தில் நடிகர்களின் ரசிகர்கள்தான் சண்டையிட்டு கொள்வார்கள். ஆனால் அஜித் விஜய்யை பொறுத்தவரை அவர்கள் இருவருமே நேரடியாக சண்டையிட்டு கொண்டனர்.

அட்டக்காசம் திரைப்படத்தில் உனக்கென்ன உனக்கென்ன என்கிற பாடல் வரிகள் இடம் பெற்றிருக்கும். அதில் உள்ள மொத்த பாடல் வரிகளும் விஜய்யை குறிக்கும் வகையில் எழுதிய பாடல் வரிகள் என ஒரு பேச்சு சினிமாவில் உண்டு. ஆனால் அது அதிகாரமற்ற தகவல்களாகவே இருந்து வந்தன.

attakaasam
attakaasam

ஆனால் அந்த பாடலின் இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறும்போது அது எதேர்ச்சையாக அமைந்த பாடல் கிடையாது. விஜய்யை குறி வைத்துதான் அந்த பாடல் எழுதப்பட்டது. வைரமுத்துதான் அதற்கு தகுந்த வரிகளை எழுதி கொடுத்தார். நீ அப்பா உதவியால் சினிமாவிற்கு வந்தாய் நான் சொந்தமாக சினிமாவிற்கு வந்தேன்.

நீ வீட்டு செடி நான் காட்டு செடி என்பதாக அர்த்தப்படுத்தும் பாடல் வரிகள் அந்த பாடலில் இருக்கும். அப்போதைய நிலையில் யாரும் அதை கண்டுக்கொள்ளவில்லை. இப்போது சமூக வலைத்தளங்கள் இருக்கும் நிலையில் அந்த பாடல் வந்தால் எங்களை கிழிச்சிடுவாங்க என்கிறார் பரத்வாஜ்.

POPULAR POSTS

sundar c
suhasini
kamalhaasan
sundar c vijay
ashok selvan
kushboo malavika
To Top