Connect with us

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

ajith vadivelu

Cinema History

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

cinepettai.com cinepettai.com

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம்.

அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் தமிழில் சுந்தர் சியிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் இயக்குனர் சுராஜ். சுந்தர் சியை போலவே இவரும் காமெடி திரைப்படங்கள் இயக்குவதில் பிரபலமானவர். இந்த நிலையில் அவரது திரைப்படங்களின் வெற்றியை பார்த்து நடிகர் அஜித்தே அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார்.

ajith
ajith

அதனை தொடர்ந்து அஜித்தின் நிர்வாகி சுராஜை தொடர்புக்கொண்டு அஜித் உங்கள் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறார். உங்களிடம் அவருக்கு தகுந்தாற் போல கதை எதாவது உள்ளதா என கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் கை வசம் வைத்திருந்த போலீஸ் கதையை அஜித்திடம் கூறினார் சுராஜ்.

அந்த கதையை கேட்ட அஜித்திற்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு வாரம் முன்புதான் அவர் க்ரீடம் என்கிற திரைப்படத்தில் நடிக்க துவங்கியிருந்தார். அதிலும் அவர் போலீஸாவதுதான் கதையாக இருந்தது. எனவே அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார் அஜித்..

அதன் பிறகு அர்ஜூனிடம் அந்த கதையை கூறினார் சுராஜ். நான் டி.எஸ்.பி மாதிரியான பெரிய போலீஸாக எல்லாம் நடித்துள்ளேன். ஆனால் கான்ஸ்டபிளாக இதுவரை நடித்ததில்லை என சிரித்த அர்ஜுன் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். மருதமலை என்கிற பெயரில் வெளியான அந்த திரைப்படம் க்ரீடம் திரைப்படத்தை விடவும் அதிக வரவேற்பை பெற்றது.

POPULAR POSTS

ajith
dhanush-karthik-kumar
shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
To Top